Advertisement

Main Ad

இலங்கை மாணவன் பங்களாதேஷில் பலி

பங்களாதேஷின் சிட்டகொங் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற இலங்கை மாணவன் ஒருவரின் சடலம் 7 மாடி கட்டிடம் ஒன்றிக்கு அருகில் இருந்து நேற்று (21) மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவன் 23 வயதான இஹ்ஸான் இர்பான் என அடையாளங்காணப்பட்டுளார்.

சிட்டகொங் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி பயின்ற
இந்த மாணவன் தனது இலங்கை நண்பர்களை சந்திப்பதற்காக ஏழு மாடி கட்டடத்தின் ஆறாம் மாடிக்கு சென்றுள்ளதாக சிட்டகொங் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரீட்சை பெறுபேறு தொடர்பில் விரக்த்தியடைந்த நிலையில் இருந்த குறித்த மாணவன் 7 மாடி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.