சாய்ந்தமருது பெமிலி சொய்ஸ் அனுசரணையில் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை ஒழுங்கு செய்துள்ள கல்முனை , சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவர்கள் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை , க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை ஆகியவற்றில் சாதனை படைத்த 100 மாணவர்களையும் உலக சமாதான அமைப்பின் இலங்கை
தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மே மாதம் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை   சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம் ( 22 ) , சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம் ( 02) சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்.பாடசாலை ( 3 ) , சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயம் ( 01 ) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ( 02 ) , மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயம் ( 02) ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் , க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் 9 பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்ற கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ( 07 ) , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ( 08 ) , சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயம் ( 01 ) மற்றும்  8 பாடங்களிலும் ” ஏ ” சித்திபெற்ற கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ( 10 ) , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (14 ) , சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயம் ( 01 )  மற்றும் 7 பாடங்களிலும் ” ஏ ” சித்திபெற்ற கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ( 11) , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி(  14) , சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயம் (02)  ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகள் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.