இலங்கையில்
விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழர்களை
இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இந்த போர்க் குற்றம் குறித்து உலக
நாடுகளும், ஐ.நா.வும் கடும் கண்டனம் தெரிவித்தன.
அதை தொடர்ந்து ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஏற்கனவே 2 தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் அடுத்த (மார்ச்) மாதம் ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. அதில், அமெரிக்கா சார்பில் இலங்கைக்கு எதிராக 3–வது தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
அதில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்கு வதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்படும் இந்த தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என இங்கிலாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது.
போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த விதமான முன்னேற்ற நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. எனவே, இங்கிலாந்து அரசு உலக நாடுகளுடன் இணைந்து சர்வதேச விசாரணைக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த தகவலை தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதை தொடர்ந்து ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஏற்கனவே 2 தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் அடுத்த (மார்ச்) மாதம் ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. அதில், அமெரிக்கா சார்பில் இலங்கைக்கு எதிராக 3–வது தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
அதில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்கு வதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்படும் இந்த தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என இங்கிலாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது.
போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த விதமான முன்னேற்ற நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. எனவே, இங்கிலாந்து அரசு உலக நாடுகளுடன் இணைந்து சர்வதேச விசாரணைக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த தகவலை தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

0 Comments