Advertisement

Main Ad

சீனாவைத் தாக்கும் கடும் புயல் கதிகலங்க வைத்துள்ளது... வீடியோ இணைக்கப்பட்டுள்ளது

சீனாவின் கிழக்குக் கரையை சான்-ஹோம்(Chan-hom) என்று பெயரிடப்பட்டுள்ள புயல் தாக்கிவருகிறது.

இந்தப் புயல் காரணமாக ஏராளமானோர் வீடுகளை விட்டும் தொழில் இடங்களை விட்டும் வெளியேற நேர்ந்துள்ளது; போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஷெஜெய்ங் மாகாணத்தில் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என ஷாங்காய் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

1949 ஜூலையில் தாக்கிய புயலுக்குப் பின்னர் இப்பகுதியைத் தாக்கும் ஆக மோசமான புயலாக இது இருக்கும் என சீனாவின் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

ஃபிலிப்பைன்ஸில் இந்தப் புயல் தாக்கி ஏற்கனவே ஐந்து பேர் உயிரிழந்திருந்தனர்; தய்வானிலும் ஜப்பானிலும் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.