முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெருமவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் அவர், மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முற்பகல் வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட மாவட்ட தேர்தல் திணைக்களத்திலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் வெலிகம பிரதேசசபையின் முன்னாள் தலைவரால் டலஸ் அழகபெரும மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.