
பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை நான் எதிர்ப்பவன். எதிர்த்தும் வருகின்றேன்.
அதற்காக இந்த விவகாரத்தை பிரசார நடவடிக்கைக்காக பயன்படுத்த நான்
விரும்பவில்லை. முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக இடம்பெறும்
சம்பவங்களை, ஜனாதிபதியினதும் பாதுகாப்புச் செயலாளரினதும் கவனத்துக்கு
கொண்டு வருகின்றேன்.
நான் உண்மையான முஸ்லிம். எனவே, வெளிப்பகட்டுக்காக எனது பிரசாரத்திற்காக
நான் எந்தச் செயலையும் செய்ய விரும்பவில்லை என்று அஸ்வர் எம்.பி.
தெரிவித்தார்.