8 பேர் கொண்ட கற்பழிக்கும் கும்பல் ஒரு வீட்டுக்குள் நுழைந்தது. அப்போது அவ்வீட்டுக்குள் திருமணமான ஆண் ஒருவரும், விதவை பெண் ஒருவரும் கள்ள உறவில் ஈடுபட்டதை அவர்கள் கண்டனர்.
கற்பழிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் உடனே அந்த ஆண் மகனை கட்டிப்போட்டு தாக்கியதுடன் அவன் கண் முன்னாலேயே அப்பெண்ணை அவர்கள் 8 பேரும் ஒவ்வொருவராக கற்பழித்துள்ளனர். பின்னர் அவர்களே அப்பெண்ணை காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அப்பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீசார் கற்பழிக்கும் கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
மேலும் திருமணமான ஆணுடன் உறவு வைத்துக்கொண்டுள்ளதால் ஷரியத் சட்டப்படி அப்பெண்ணுக்கும், அவளது காதலனுக்கும், பொதுமக்கள் முன்னிலையில் 9 பிரம்படி கொடுக்கப்பட்டது.
