மத்தியமுகாம், 4ம் கொலனியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது
பரிமாறப்பட்ட உணவு நஞ்சானதில் சுமார் 55 பேர் கல்முனை வடக்கு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று (03) மாலை 6.50 மணிமுதல் 9.30 மணிவரையும் பாதிக்கப்பட்ட நேயாளர்கள்
தொடர்ந்து அனுமதிக்கப்பட்டதாகவும் இதில் 18 சிறுவர்களும் 37க்கு மேற்பட்ட
பெரியவர்களுமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
வைத்தியதாதிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கின்ற போதிலும் சில
தாதிகள் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கியதாக கல்முனை
வடக்கு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
